ஐ நா மனிதவுரிமை ஆணையாளர் இலங்கை வரவுள்ளார்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹ{சைன் அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அவரது இந்த விஜயம் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெறவிருந்தது. எனினும் பல்வேறு காரணங்களால் இந்த விஜயம் பிற்போடப்பட்டுவந்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த வருட ஆரம்பத்தில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த விஜயத்துக்கான திகதிஇன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

ஐ நா மனிதவுரிமை ஆணையாளர்
Comments (0)
Add Comment