கனடாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழப்பு

கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் ஹொரண பகுதியை சேர்ந்த ரேனுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை டொரோண்டோ பகுதியில்  வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில்  10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்திருந்தன.

இதில் இலங்கையை சேர்ந்த ரேனுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

 

 

இலங்கை பெண்கனடாடொரோண்டோவிபத்து
Comments (0)
Add Comment