கரண்ட் கம்பிகளில் மோதிச் சாகவா என் பறவையே கடல் கடந்தீர்

 

கரண்ட் கம்பிகளில் மோதிச் சாகவா என் பறவையே கடல் கடந்தீர்
இறங்கும் கரண்ட் மண்டைக்குள் சிதறுகிறது
கொதிப்படங்க இரத்தமுமில்லை
உன்னையடக்க நிலமுமில்லை

நமது காலத்தின் எல்லா வார்த்தைகளும்
எல்லாவற்றையும் கொல்கின்றன

எனது தந்தையே
நாம் வார்த்தைகளால் கைவிடப்பட்டோம்

பின்னும் ஏன் ,
கரண்ட் கம்பிகளில் மோதிச் சாகவா

பறவையே கடல் கடந்தீர்

கிரிசாந்த்

ஈழக் கவிதைகவிதைகிரிசாந்த்தமிழக அகதிரவி
Comments (0)
Add Comment