சிறிலங்காவின் தமிழின அழிப்பை மறைக்கும் நோக்கிலான கலாசார விழா எனும் சிங்களத்தின் சூழ்ச்சிதனை வன்மையாகக் கண்டித்து 10.09.2016 சனிக்கிழமை அன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.
சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இவ் நிகழ்வின் சூழ்ச்சியை அனைவரும் அறிந்து புறக்கணிக்கும் முகமாகவும், குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ் கவனயீர்ப்புப் போராடடத்திற்கு வலு சேர்க்கும் வகையில் எமது உறவுகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.