காமன்வெல்த் போட்டி: இந்திய குத்துச்சண்டை வீரர் கவுரவ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

காமன்வெல்த் இளையோர் விளையாட்டுப் போட்டியில், குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சோலங்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற கவுரவ் சோலங்கி , அரையிறுதியில் இங்கிலாந்து வீரர் பிரண்டன் டோயர்டை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை வசமாக்கினார். இதன் மூலம் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை அவர் உறுதி செய்துள்ளார்.

49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற பீம்சந்த் சிங், 64 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற பிரயாக் சவுகான் ஆகியோர் அரையிறுதியில் தோல்வியடைந்தனர். இதையடுத்து வெண்கலப்பதக்கங்களுடன் அவர்கள் நிறைவடைந்தனர்.

இளையோர் விளையாட்டுப் போட்டிகவுரவ்காமன்வெல்த்குத்துச்சண்டைவெண்கலப்பதக்கம்வெற்றி
Comments (0)
Add Comment