கிளிநொச்சி மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளிற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 23 ம் 24 ம் திகதிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை கிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்துள்ளார்.
குறித்த நேர்முகத்தேர்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சுக்கு இதுவரை விண்ணப்பிக்காத பட்டதாரிகள் எதிர்வரும் 20 திகதிக்கு முன்பாக மாவட்ட செயலகத்தில் விண்ணப்பத்தை சமர்பித்து நேர்முக திகதியை பெற்ருக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.