சிறிலங்கா அரசால் 10000 இற்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் – சிவசக்தி ஆனந்தன்

வடக்கு கிழக்கு உட்­பட பல பிர­தே­சங்­களில் 10,000 இற்கும் மேற்­பட்­ட­வர்கள் கடத்­தப்­பட்டு காணாமல் போயுள்­ளனர் என வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவு­னியா நக­ர­சபை மைதா­னத்தில் நேற்று இடம்­பெற்ற காணாமல் போனோரின் உற­வி­னர்­களின் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் கலந்­து ­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவிக்­கையில்,

மஹிந்த ராஜ­பக்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் காணா­மல்­போனோரின் பெற்­றோர்கள் இதே மாவட்­டத்தில் இதே இடத்தில் பல போராட்­டங்கள் மகஜர், கைய­ளிப்பு என்­ப­வற்றை செய்து எது வித பல­னு­மற்ற நிலை காணப்­பட்­டது.தற்­போது புதிய அர­சாங்கம் வந்­துள்ள நிலையில் காணாமல் போனோர் தொடர்பில் அவர்­களின் கவ­னத்தை ஈர்க்கும் நோக்­கோடு இந்த சாத்­வீக போராட்டம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

ஆகவே இந்த அர­சாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி இந்த 100 நாள் வேலைத்­திட்­டத்தில் காணாமல் செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களின் குடும்­பங்­க­ளிடம் அவர்­களின் விப­ரங்­களை திரட்டி அவர்­களின் பிள்­ளைகள் மற்றும் உற­வி­னர்கள் எங்கு தடு­த்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள், எந்த சிறை­களில் உள்­ளார்கள் என்­பது தொடர்பில் தக­வலை வெளியி­ட­வேண்டும்.

இந் நிலையில், நாங்கள் அறி­கின்றோம் இர­க­சிய சிறை­களில் பலர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக. எனவே அவர்கள் தொடர்பில் தக­வல்­களை வெளியிட வேண்டும். அவ்­வாறு இல்­லாமல் காணாமல் செய்­யப்­பட்­ட­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்தால் இந்த அர­சாங்கம் வெளியில் சொல்­ல­வேண்டும். படு­கொலை செய்­த­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்க வேண்டும்.

வடக்­கிலும் கிழக்­கிலும் ஏனைய பிர­தே­சங்­க­ளி­லு­மாக 10000 இற்கும் மேற்­பட்­ட­வர்கள் கடத்­தப்­பட்­டுள்­ளார்கள். அவர்கள் காணாமல் போயுள்­ளனர். எனவே இங்கு உள்ள ஒவ்­வொரு தாய்­மாரும் தங்­க­ளது பிள்­ளை­க­ளுக்கு விடு­தலை வேண்டும் என்­ப­தற்­காக அண்­மையில் நடந்த ஜனா­தி­பதி தேர்­த­லிலும் கூட ஆட்சி மாற்றம் வேண்டி தற்­ச­மயம் ஜனா­தி­ப­தி­யாக இருக்கும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வாக்­க­ளித்­துள்­ளார்கள்.

ஆகவே புதிய அர­சாங்கம் இந்த பிரச்­ச­னையை நீடிக்­காமல் மிக விரை­வாக காணாமல் போன­வர்­களின் உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்­டிய பெரிய பொறுப்பும் காணப்­ப­டு­கின்­றது.

தற்­ச­மயம் வெளிவி­வ­கார அமைச்­ச­ராக இருக்க கூடிய மங்­கள சம­ர­வீர வெளிநா­டு­களில் அக­திகள் என்ற பெயரில் இலங்கையர்கள் இருக்க கூடாது என தெரிவித்துள்ளார். அதேபோல் காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளும் எங்கேயும் இருக்க கூடாது என்பதனை கருத்தில் கொண்டு இவற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றார்.

ஆனந்தன்உரைஉறுப்பினர்கவனயீர்ப்புகிழக்குசிவசக்திநகரசபைபாராளுமன்றம்பிரதேசம்போராட்டம்மைதானம்ராஜபக்சவடக்குவவுனியா
Comments (0)
Add Comment