டென்மார்க்கில் கரும்புலிகள் நாள் நினைவு கூறல்

டென்மார்க்கில் நேற்று (05) கரும்புலிகள் நாள் நினைவுகூரப்பட்டது. மண்ணும் மக்களும் மறக்கமுடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள் இன்றோடு 27 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும், இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், ஏன்…. உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது.

கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும்நினைவு நாளே கரும்புலிகள் நாள்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கும், அதன் இராணுவத்திற்கும் எதிராக, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும்.

இந்த காவல் தெய்வங்களை நினைவு கூர்ந்து டென்மார்கில் கேர்ணிக் நகரில் அகவணக்க நிகழ்வு நடைபெற்றது. அகவணக்கம், ஈகைச்சுடர், மலர்வணக்ம் மற்றும் கரும்புலிகள் பற்றிய கவிதைகள் என்பன இடம்பெற்றது.

5ம் நாள்ஆண்டும்ஒவ்வொருகடைப்பிடிக்கப்படும்கரும்புலிகளைகரும்புலிகள்ஜூலைநாளேநாள்நினைவுநினைவுகூரும்வகையில்
Comments (0)
Add Comment