தமிழர்களின் உரிமைக்காக மீண்டும் பிரபாகரன் உருவாக்கக்கூடாது!

தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் தேசியப் பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வு கிடைக்கும் வகை­யிலும், தமிழ் மக்­களின் உரி­மை­களை பலப்­ப­டுத்தும் நோக்­கிலும் ஒரு அர­சி­ய­ல­மைப்பு உரு­வா­கு­மாயின் அதை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி முழு­மை­யாக ஆத­ரிக்கும். உரி­மைக்­கான போராட்­டத்தில் மீண்டும் பிர­பா­கரன் போன்­ற­வர்கள் உரு­வா­கி­விடக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தெரி­வித்­தது.

மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர்.

இதன்­போது கட்­சியின் ஊட­கப்­பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­விக்­கையில்,

அதி­கா­ரப்­ப­கிர்வு என்­பது இன்று மிகவும் அவ­சி­ய­மான ஒன்­றாகும். மாகா­ண­சபை அதி­கா­ரப்­ப­கிர்வு மற்றும் எல்லை நிர்­ணயம் என்­பன கவ­னத்தில் கொள்­ள­வேண்­டிய ஒன்­றாகும். இப்­போதும் இந்த விட­யத்தில் இழுத்­த­டிப்பு செய்தால் அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் பொய்­யான ஒன்­றாக மாறி­விடும். எனவே பொருத்­த­மான வகையில் 20ஆம் திருத்தம் கொண்­டு­வ­ரு­வதும் ஏனைய அத்­தி­யா­வ­சிய திருத்­தங்­களை மேற்­கொள்­வதும் மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும்.

அதேபோல் இந்த சிக்­கல்­களை தீர்ப்­பதில் புதிய அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை உரு­வாக்­கு­வதா அல்­லது இருக்கும் அர­சி­ய­ல­மைப்பை திருத்­து­வதா என்ற விடயம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் கலந்­தா­லோ­சிக்க வேண்டும். அதேபோல் மக்கள் கருத்தை ஆராய வேண்­டி­யதும் அவ­சி­ய­மா­னது. இப்­போது இருக்கும் ஜனா­தி­பதி மக்கள் கருத்துக் கேட்­கா­ம­லேயே தனது அதி­கா­ரங்­களை குறைத்­துள்ளார். இது சிறந்த எடுத்­துக்­காட்­டாகும், எனினும் எல்லா விட­யங்­க­ளிலும் அவ்­வாறு மேற்­கொள்­வது சிர­ம­மா­ன­தாகும்.

ஆகவே நாட்டை பலப்­ப­டுத்தும் வகை­யிலும், நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் மாற்றம் ஒன்றை நோக்கி பய­ணிக்க வேண்டும். மீண்டும் பிர­பா­கரன் போன்ற பயங்­க­ர­வாதத் தலை­வர்கள் உரு­வா­காத வகையில், தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்கும் வகை­யிலும், சிறு­பான்மை மக்­களின் உரி­மை­களை பலப்­ப­டுத்தும் வகை­யிலும் ஒரு அர­சி­ய­ல­மைப்பு உரு­வா­கு­மாயின் அதை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆத­ரிக்கும். அதேபோல் அனைத்து தரப்­பி­ன­ரதும் இணக்­கப்­பாட்டை ஆரா­ய­வேண்­டி­யதும் அவ­சி­ய­மான ஒன்­றாகும்.

இது தொடர்பில் பிரதி நிதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அப­ய­வர்­தன தெரி­விக்­கையில்,

அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் இன்று முக்­கி­ய­மான ஒன்­றாக கரு­தப்­ப­டு­கின்­றது. இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு வர­லாற்றில் 19 தட­வைகள் திருத்தம் மேட்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இதில் 17ஆம் மற்றும் 19ஆம் திருத்­தத்தை தவிர ஏனைய அனைத்து திருத்­தங்­களும் ஆட்­சி­யா­ள­ரையும் அர­சாங்­கத்­தி­னதும் அதி­கா­ரத்தை பலப்­ப­டுத்தும் வகையில் தான் அமைந்­துள்­ளன. எனினும் 19ஆம் திருத்தும் கொண்­டு­வ­ரப்­பட்டு ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை குறைப்­பது என்ற நிலைப்­பாட்டை ஜனா­தி­பதி கொண்­டு­வந்தார்.

அதேபோல் அர­சியல் அமைப்பு திருத்தம் கொண்­டு­வ­ரு­வதில் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணக்­கப்­பாட்­டுடன் தான் செயற்­பட்டு வரு­கின்­றன. இப்­போது கொண்­டு­வ­ர­வுள்ள திருத்தம் தொடர்பில் நாம் முன்­வைத்த ஒன்­பது யோச­னை­க­ளையும் ஏற்­று­கொள்ளும் வகை­யிலும், இணக்­கப்­பாடு ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது. ஆகவே இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்ள இந்த தீர்­மா­னங்­களை ஒன்­றின்பின் ஒன்­றாக நிறை­வேற்ற வேண்டும்.

முதலில் தேர்தல் முறை­மையை மாற்­று­வது என்றால் அதற்கும் நாம் இணக்கம் தெரி­விக்க தயாராக உள்ளோம். தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவது அவசியமானது. ஆகவே முதலில் தேர்தல் முறைமையை மாற்றி அதன் பின்னர் ஏனைய விடயங்களை மாற்றியமைக்க முடியும். எவ்வாறு இருப்பினும் சிறுபான்மை மக்கள் மற்றும் சிறுபான்மை கட்சிகளை பலப்படுத்தும் வகையிலும் மக்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையிலும் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

உரிமைக்காகஉருவாக்கக்கூடாதுதமிழர்களின்பிரபாகரன்மீண்டும்
Comments (0)
Add Comment