தினமும் சாப்பிட கூடாத உணவுகளில் தயிரும் ஒன்று

தயிர், மோர் இரண்டுமே உடலுக்குக்  குளிச்சியைத்தான் தந்தாலும் பெரும்பாலானவர்களிற்கு. கோடைக்காலத்தில் தயிரை பயன்படுத்துவது சிறந்ததா? அல்லது மோரை பயன்படுத்துவது சிறந்ததா? என்ற சந்தேகம்    இருக்கும்.

அதிக குளிர்ச்சி

என்னதான் இரண்டும் குளிர்ச்சியை தந்தாலும், தயிரைவிட மோர் உடலில் அதிக குளிர்ச்சியை அதிக நேரத்துக்கு தக்கவைத்துக்கொள்ள உதவும்.

ஆயுர்வேத மருத்துவத்தின்படி தினமும் சாப்பிட கூடாத உணவுகளில் தயிரும் ஒன்று.

தினமும் தயிர் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு, சுவாசப் பிரச்னைகள், இருமல் போன்றவை உண்டாகுமாம்.

ஆனால், தினமும் மோர் குடித்தால் அது பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவும்.

கால்சியம் குறைபாடு, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், நீரிழப்பு ஆகியவற்றை சரிசெய்யும்.

எனவே, கோடைக்காலத்தில் தயிரை விடவும், மோரை பயன்படுத்துவதே சிறந்தது.

குளிர்ச்சிதயிர்பல்வேறு நோய்மோர்
Comments (0)
Add Comment