அப்போது பேச்சுக்களில் பங்கெடுத்த மாவை தான் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்பட பூரண விருப்பம் மற்றும் ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.குறிப்பாக சீ.வி.கே.சிவஞானம், குலநாயகம் மற்றும் கனகசபாபதி போன்றவர்கள் அத்தகைய நெருக்குவாரங்களை தருவதாக தெரிவித்த மாவை இவர்களை புறந்தள்ளி பேரவையுடன் பகிரங்கமாக இணைந்து செயற்படமுடியாதுள்ளமைக்கு கவலையையும் தெரிவித்துள்ளார்.
எனினும் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட தலைமை இணைந்து செயற்படும் தனது விருப்பத்திற்கு கடுமையான முட்டுக்கட்டைகளையும் நெருக்குவாரங்களையும் போட்டுவருவதாகவும் மாவை.சேனாதிராசா கவலை வெளியிட்டுள்ளார்.