1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் குமுதினி படகில் பயணித்தவர்களை நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 32 வருடங்கள் ஆகுகின்றது.
நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களை நினைவு கூர்ந்து இன்று நெடுந்தீவில் நினைவேந்தல் நிகழ்வு நடை பெற்றது.