பிரான்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் 21வது உலக சுற்றாடல் மாநாட்டில் 169 நாட்டுத்தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வீதிகள் மூடப்பட்டு 110000 படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் தாக்குதல் காரணமாகவே இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.