புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக முன் வைத்த காலை அரசாங்கம் பின் வைக்கக்கூடாது. ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நியாயமான கரிசனையை, பிற்போக்குவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இரு தரப்பிடமும் கோரினார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.