மங்கல நாதஸ்வர இசையுடன் நிகழ்வுகள் ஆரம்பம் ஆனது. முத்தமிழ் நிகழ்வுகளுடன் , தாயாக நாடகக் வித்துவான்கள் இணைத்து புலத்தில் பொங்கல் என்ற நடக்கத்தினால் மக்களை மகிழ்வித்து மக்களிடம் கரகோசங்களைப் பெற்றுக்கொண்டனர். தமிழர் கல்வி கழக மாணவர்கள் தமிழ் மொழியில் சிறப்பு நிகழ்சிகளாக பல நிகழ்வுகளை வழங்கினார்கள். ஐரோப்பிய தமிழர் ஒன்றிய தலைவர் திரு கிருபானந்தன்அவர்கள் சிறப்புரை வழங்கியிருந்தர். சிறப்புரையில் வரலாற்றை பாடமாக கொண்டு போலிகளின் குழப்பத்திற்கு மக்கள் குழம்பாது எப்படி தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வழிகாட்டலில் பயணித்தார்களோ தொடர்ந்து பயணிப்போம் என கூறியிருந்தார்.
தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு கௌரவிப்பும். மனிதநேய ஈரூரூளி பணியாளர்களுக்கு கௌரவிப்பும் , கலை வித்துவான்களையும் கௌரவித்து தொடர்ந்து எமது தாயாக நிலத்தை மீட்கும் வரை தமிழரை ஒருமையாக மாவீரர் துணையுடனும் , தலைவரின் வழிகாட்டலில் பயணிப்போம் என உறுதி மொழியுடன் நிகழ்வு நிறைவு அடைந்தது.