கிளிநொச்சியில் கடந்த 31/08/2017 அன்று மாரடைப்பால் சாவடைந்த போராளி வீமனின் தாயார் கடந்த எட்டாண்டு காலமாக,முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது மகனை தேடிவந்த நிலையில் மன அழுத்தம் அதிகரித்து மாரடைப்பால் சாவடைந்தார்.இவரின் இறுதிக்கிரிகைகள் எட்டுமாவட்டத்தையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உறவுகள் மற்றும் கிளிநொச்சி மக்களும் திரண்டு மேற்கொள்ளப்பட்டு பூதவுடல் களிநொச்சி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.