காணிகளை மக்களிடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும்!

இது­வரை மீள் வழங்­கப்­ப­டா­துள்ள பொது மக்­களின் காணிகள் உரிய காணி உரி­மை­யா­ளர்­க­ளிடம் மிக விரை­வாக வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்” என்று அமெ­ரிக்கா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அத்­துடன் இலங்கை மேற்­கொண்டு வரும் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு செயற்பா­டு­க­ளுக்கும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கும் முயற்­சி­க­ளுக்கும் முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தா­கவும் அமெ­ரிக்கா சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

வாஷிங்­டனில் கடந்த சில தினங்­க­ளாக நடை­பெற்ற இலங்­கைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யி­லான பங்­கு­டமை கலந்­து­ரை­யா­டலின் பின்னர் விடுக்­கப்­பட்ட கூட்­ட­றிக்­கை­யி­லேயே இந்த விட­யங்கள் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளன.

அந்த கூட்­ட­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள மேலும் சில முக்­கிய விட­யங்கள் வரு­மாறு,

இலங்­கையின் ஜன­நா­ய­கத்தைப் பலப்­ப­டுத்­தவும் நல்­லாட்சி, சட்­டத்தின் ஆட்­சிப்­ப­டுத்தல், நீதி மற்றும் நல்­லி­ணக்கம், பாரா­ளு­மன்ற செயற்­பா­டுகள் போன்­ற­வற்றை வலுப்­ப­டுத்­தவும் இலங்கை அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கின்­றது. இதே­வேளை,கடந்த வரு­டத்தில் இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட முன்­னேற்­றங்­களை அமெ­ரிக்கா வர­வேற்­கின்­றது.

விசே­ட­மாக அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்த சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டமை, சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட் ­டமை, மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யமை, விசா­ரணைப் பொறி­மு­றை­யொன்றை முன்­னெ­டுப்­ப­தற்கு நடவ­டிக்கை எடுத்­தமை போன்­ற­வற்றை குறிப்­பிட்டுக் கூற முடியும்.

அந்த வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கு அமெ­ரிக்கா ஆத­ரவை வழங்கும். இலங்­கைக்கும்

அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் பல­மான நட்­பு­றவு கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டு­வதை இரண்டு நாடு­களும் அங்­கீ­க­ரித்­துள்­ளன. எதிர்­வரும் காலங்­களில் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தில் அமெ­ரிக்கா மிக அதி­க­ளவு முத­லீ­டு­களை மேற்­கொள்­ள­வுள்­ளது.

இதே­வேளை இது­வரை மீள் வழங்­கப்­ப­டா­துள்ள பொது மக்­களின் காணிகள் காணி உரி­மை­யா­ளர்­க­ளிடம் மிக விரை­வாக வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அத்­துடன் பயங்­க­ர­வாத தடைச் சட்த்­திற்கு பதிலாக சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைவாக மாற்றீடு ஒன்றை மேற்கொள்ளவுள்ள இலங்கை அரசாங்கத்தின் முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும்.

மேலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பு கூட்டுறவை பலப்படுத்த வேண்டுமென இரண்டு நாடுகளும் திட்டமிடுகின்றன.

அமெரிக்காஒப்படைப்புமக்களின் காணிகள்விரைவில்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment