மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் வழங்கத்தீர்மானம்?

பிர­திப் பொலிஸ் மா அதி­பர் (டி.ஐ.ஜி.) ஒரு­வ­ரின் தலை­மை­யில் மாகா­ணங்­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரத்தை வழங்­கு­வ­தற்கு, புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான வழி­காட்­டல் குழு நேற்று இணக்­கம் கண்­டது. மாகாண சட்­டம், ஒழுங்கு அமைச்­சுக்­குப் பொறுப்­புக் கூறு­ப­வ­ராக அவர் இயங்­கு­வார் என்­றா­லும் விசா­ரணை மற்­றும் நீதி­மன்ற வழக்­கு­க­ளில் அவர் சுயா­தீ­னத்­து­டன் இயங்­கு­ப­வ­ராக இருப்­பார்.
இந்த இணக்­கப்­பாட்­டு­டன் புதிய அர­ச­மைப்­பில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்­கள் முடி­வுக்கு வந்­தன. புதிய அர­ச­மைப்­புக்­கான வழி­காட்­டல் குழுக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. மகிந்த அணி­யி­னர் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­ள­வில்லை. எனி­னும் சட்­டம் ஒழுங்கு அதி­கா­ரம் குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்டு இறுதி செய்­யப்­பட்­டது.  வழி­ந­டத்­தல் குழு­வின் 52 ஆவது கூட்­டம் இது.
நேற்­று­முன்­தி­ன­மும் நேற்­றும் என தொடர்ச்­சி­யாக இரு நாள்­கள் இந்­தக் கூட்­டம் நடை­பெற்­றது. நேற்­று­முன்­தி­னம் நடந்த கூட்­டத்­தில் பங்­கேற்­காத சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் நேற்­றைய கூட்­டத்­தில் கலந்து கொண்­ட­னர். சட்­டம் ஒழுங்கு தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக வழி­ந­டத்­தல் குழு­வால் நிய­மிக்­கப்­பட்ட நாடா­ளு­மன்ற  உப  குழு­வின் அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் நேற்­றைய கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது.
மாகா­ணத்­தின் சட்­டம் ஒழுங்கு அமைச்­சுக்கு கீழ் பொலிஸ் அதி­கா­ரத்தை வழங்­கு­வ­தற்கு கூட்­டத்­தில் கலந்து கொண்ட தரப்­புக்­கள் இணக்­கம் கண் டன என்று தெரி­விக்கப்­பட்­டது.
மாகா­ணத்­துக்­கு­ரிய பிர­திப் பொலிஸ்மா அதி­பர், மாகா­ணத்­தின் முத­ல­மைச்­ச­ரின் சம்­ம­தத்­து­ட­னேயே நிய­மிக்­கப்­ப­டு­வார். பிர­திப் பொலிஸ் மா அதி­பர் மாகாணச் சட்­டம் ஒழுங்கு அமைச்­சுக்­குப் பொறுப்­புக் கூறு­ப­வ­ராக இருப்­பார். எனி­னும் விசா­ர­ணை­ கள் – வழக்கு விட­யங்­க­ளில் அவர் சுயா­தீ­ன­மா­கச் செயற்­ப­டு­வார். மாகா­ணத்­திற்­கு­ரிய பொலிஸ் ஆணைக்­கு­ழுவே, பொலி­ஸாரை ஆட்­சேர்ப்­புச் செய்­யும்.  பொலி­ஸா­ரின் இட­மாற்­றம், பதவி உயர்வு வழங்­கு­வது,
நிய­ம­னம் உள்­ளிட்ட பணி­க­ளை­யும் அதுவே மேற்­கொள்­ளும். மாகா­ணத்­திற்­கு­ரிய பொலிஸ் ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­னர்­களை, அர­ச­மைப்­புச் சபை நிய­ம­னம் செய்­யும். மாகா­ணத்­தின் முத­ல­மைச்­ச­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரும் இணைந்து முன்­மொ­ழி­யும் பெயர்­க­ளி­லி­ருந்தே அர­ச­மைப்­புச் சபை மாகாண பொலிஸ் ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­னர்­களை நிய­மிக்­கும்.
முத­ல­மைச்­ச­ரும், எதிர்க்கட்­சித் தலை­வ­ருக்­கும் இடை­யில் இது­வி­ட­யத்­தில் இணக்­கம் எட்­டப்­ப­ட­வில்லை என்­றால் இரு­வ­ரும் தனித்­த­னி­யா­கப் பெயர்­க­ளைப் முன்­மொ­ழி­ய­ லாம்.  அவர்­கள் முன்­மொ­ழி­யும் பெயர்­கள் பொருத்­த­மா­ன­வை­யாக இல்­லா­த­பட்­சத்­தில் வேறு பெயர்­களை முன்­மொ­ழி­யும்­படி அர­ச­மைப்­புச் சபை கோரும். அப்­போ­தும் திருப்­தி­யற்ற பெயர்­களே முன்­வைக்­கப்­பட்டால், அர­ச­மைப்­புச் சபையே  பொலிஸ் ஆணைக்­கு­ழுவை நிய­மிக்­கும்.
 பொலிஸ் அதி­கா­ரம் பகி­ரப்­ப­டு­தல் தொடர்­பான விவ­கா­ரங்­கள் நேற்­று­டன் முற்­றுப் பெற்­றுள்­ளது. இதன் மூலம் அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பான விட­யங்­கள் முழுமை பெற்­றுள்­ள­தாக, வழி­ந­டத்­தல் குழுக் கூட்­டத்­தில் கலந்து கொண்ட உறுப்­பி­னர் ஒரு­வர் தெரி­வித்­தார். அடுத்த கூட்­டம் ஏப்­ரல் மாதம் முதல் வாரத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது.
இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்­தின் கீழ் கொண்டு வரப்­பட்ட மாகாண சபை­கள் சட்­டத்­தின் ஊடாக மாகா­ணங்­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்­டன என்­றா­லும் கடந்த காலங்­க­ளில் அவை இலங்­கை­யில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மாகாண சபை­கள் சட்­டத்­தில்  உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­சக­ரின் கீழ்­தான் மாகாண பொலிஸ் அதி­கா­ரம் உள்­ளது. எனி­னும் அது­வும் நடை­மு­றை­யில் இல்லை  என்­பது குறிப்­பி­டத்­தக்கது.
போலீஸ் அதிகாரம்மாகாணம்முதலமைச்சர்மைத்திரி அரசு
Comments (0)
Add Comment