தமிழ்மக்களின் சுதந்திரத்துக்காகவும் உரிமைகளுக்காகவும், தமது உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் கனடிய நாடாளுமன்றில் உரையாற்றியுள்ளார். நேற்று அவர் நிகழ்த்திய உரையில் கனடாவில் வாழும் தமிழர்கள் மாவீரர்களை நினைவு கூருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.