வட மாகாண மீனவர்களால், தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கையளிக்கவுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் காரணமாக, வட மாகாண மீனவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதற்கு நிரந்தரத் தீர்வொன்று பெற்றுக்கொள்ள வேண்டும். அதனால், இவ்விடயம் குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடுவேன் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.