வடமாகாண போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் ப.டெனிஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக தொழில் பயிற்சி நிலையத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 100 பேருக்கு வாழ்வாதார உதவிக்காக தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான உதவித் தொகை வழங்கி வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து குறித்த பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.