கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் அலுவலகத்தில், நேற்று (சனிக்கிழமை) 100 பேருக்கு சீமெந்து பொதிகளை வழங்கிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த கால அரசாங்கத்தில் உரிய முறையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லையென குறிப்பிட்ட அவர், இனிவரும் காலத்தில், முன்னாள் போராளிகள், மாற்றுத் திறனாளிகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை முன்னிலைப்படுத்தியே வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.
அத்தோடு, யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கே அதிக வீடுகள் வழங்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா குறிப்பிட்டார்.