படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதனை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இதணை அனுசரணை வழங்கியிருந்தது. அரசாங்கத்தின் பொறுப்புணர்ச்சியற்ற செயற்பாடுகளின் காரணமாக அரசாங்கம் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை அரசாங்கம் வாசித்து புரிந்து கொண்டதா என்பதில் சந்தேகம் உள்ளது. ஏனெனில், அரசாங்கப் படையினர் சிவிலியன்களை கொலை செய்ததாகவும் சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டதாகவும் நம்புவதற்கு போதியளவு ஏதுக்கள் காணப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாதுகாப்புப் படையினர் சட்டவிரோத கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல்களில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. படையினர் மிகக் கொடூரமான சித்திரவதைகளில் ஈடுபட்டதாகவும், காணாமல் போனவர்களின் உறவினர்களது உரிமைகளை அரசாங்கம் முடக்கியதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த தீர்மானம் இலங்கையினால் கொண்டு வரப்பட்டது. ஏனெனில் இதில் இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ளது. வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்புடன் யுத்தக் குற்றச் செயல் விசாரணைப் பொறிமுறைமை அமையாது என்ற ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. விசாரணைகளை நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.