ஊக்க மருந்து குற்றச்சாட்டு எதிரொலியாக ரஷிய தடகள வீரர்-வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
ரஷிய அணியினருக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று உலக ஊக்க மருந்து தடுப்பு கழகமும், சில நாடுகளின் ஒலிம்பிக் சங்கமும் வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வருகிற 24-ந் தேதி இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.