வயதான பாட்டிகளுக்கிடையே கைகலப்பு! ஒரு பெண் பலி

வயோ­திபப் பெண்­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்ற மோதலில் 83 வய­து­டைய பெண் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

சிலாபம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நல்­ல­த­ரன்­கட்டு பான்­குளம் கிரா­மத்தில் வசிக்கும் ஆர். பி. ரன்­மெ­னிக்கே எனும் சிங்கள வயோ­திபப் பெண்ணே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

உயி­ரி­ழந்த வயோ­திபப் பெண் தினமும் மாலையில் தனது வீட்­டுக்கு அருகில் இருக்கும் தேவா­ல­யத்­திற்குச் சென்று வரு­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்­துள்ளார்.

இவ்­வாறு சம்­பவ தின­மான கடந்த வியா­ழக்­கி­ழமை இவர் தேவா­ல­யத்­திற்குச் சென்று அங்கு சற்று தாம­தித்­தி­ருந்த போது 63 வய­து­டைய அய­ல­வ­ரான மற்­றொரு வயோ­திபப் பெண்ணும் அங்கு வந்து  தக­ராற்றில் ஈடு­பட்டு அப்­பெண்ணைத் தாக்­கி­யுள்­ளார்.

இது தொடர்பில் சிலாபம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. மறுநாள் பொலிஸார் எதி­ரா­ளி­யான பெண்ணை பொலிஸ் நிலை­யத்­திற்கு வர­வ­ழைத்து அப்­பெண்ணை எச்­ச­ரித்­துள்­ளனர்.  இந்­நி­லையில் தாக்­கு­த­லுக்­குள்­ளான பெண் மீண்டும் கடு­மை­யான சுக­யீ­னத்­திற்கு உள்­ளாகி சிலாபம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் வைத்­தி­ய­சா­லையில் உயி­ரி­ழந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சிலாபம்தாக்குதல்நல்­ல­த­ரன்­கட்டுபலிபாட்டிபான்­குளம்பெண்போலீஸ்மூதாட்டிமோதல்விசாரணைவைத்தியசாலை
Comments (0)
Add Comment