விக்கி சம்மந்தனுக்கு எதிராக ஸ்ரீ போலீசில் முறைப்பாடு!

நாட்டில் பிரி­வி­னை­யினை தூண்­டு­வ­தா­கவும் தமிழீழ விடுதலைப்புலிகளை நியா­யப்­ப­டுத்தி ஆயு­தப்­போ­ராட்­டத்தை மீண்டும் தோற்­று­விக்கும் வகை­யிலும் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் மற்றும் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் ஆகியோர் செயற்­ப­டு­ வ­தாகக் கூறியும் உட­ன­டி­யாக இவர்கள் இரு­வ­ரையும் கைது­செய்து விசா­ரிக்­கு­மாறு வலி­யு­றுத்­தியும் இனவாதக்கட்சிகளான  பொது­பல சேனா, சிங்­கள ராவய, ராவணா பலய ஆகிய அமைப்­புகள் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளன.

பொலிஸார் விசா­ரிக்க தவறும் பட்­சத்தில் நீதி­மன்றம் வரையில் சென்று முறை­யி­டு­வ­தா­கவும் சிங்­கள அமைப்­பு­களை ஒன்­றி­ணைத்து எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தை மேற்­கொள்­ள­வ­தா­கவும் எச்­ச­ரித்­துள்­ளனர்.

வடக்கு கிழக்கு பகு­திகள் மொழிசார் பிராந்­தி­யங்­க­ளாக உரு­வாக்­கப்­பட வேண்டும் எனவும் மலை­யக தமிழ் மக்­களின் பிராந்­தி­யங்­களும் உரு­வாக்­கப்­பட வேண்டும் எனவும் வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் தெரி­வித்­தி­ருந்த நிலையில் அதனை கண்­டிக்கும் வகையில் பொது­பல சேனா, சிங்­கள ராவய , ராவணா பலய ஆகிய அமைப்­புகள் கடும் எதிர்ப்­பினை தெரி­வித்­தி­ருந்­தன.

அதேபோல் எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் எதிர்க்­கட்சி தலைவர் என்ற ரீதியில் செயற்­ப­டாது தமிழ் மக்கள் சார்ந்து தனது முடி­வு­களை எடுப்­ப­தா­கவும் புலி­களை நியா­யப்­ப­டுத்தும் வகையில் கருத்­து­களை முன்­வைப்­ப­தா­கவும் தெரி­வித்­தனர். இந்த நிலை­லேயே வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் மற்றும் எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் ஆகி­யோரை உட­ன­டி­யாகக் கைது­செய்­யக்­கோரி பொது­பல சேனா, சிங்­கள ராவைய , ராவணா பலய ஆகிய அமைப்­புகள் கோட்­டையில் அமைந்­துள்ள பொலிஸ் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று முறைப்­பாடு செய்­துள்­ளன .

இது தொடர்பில் பொது­பல சேனா அமைப்பின் நிரு­வாகப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே தெரி­விக்­கையில்,

கடந்த காலங்­களில் வட­மா­காண சபை­யி­னதும் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் மற்றும் விக்­கி­னேஸ்­வரன் ஆகி­யோரின் செயற்­பா­டுகள் மிகவும் மோச­மான ஒன்­றாக அமைந்­துள்­ளன. நாட்டை பிரித்து மீண்டும் புலி­க­ளுக்கு உயிர் கொடுக்க இவர்கள் முயற்­சிக்­கின்­றனர். வட­மா­காண முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் தனி பிராந்­தி­யத்தை கேட்­கின்றார். தமிழ் மக்கள் தனித்து வாழ­வேண்டும் எனவும் வடக்கு கிழக்கு இனைய வேண்டும் எனவும் தெரி­விக்­கின்­றனர். இவர் முத­ல­மைச்­ச­ராக பதவிப் பிர­மாணம் செய்­து­கொண்ட போது நாட்டில் பிரி­வி­னை­வாதம் உரு­வா­காது எங்­களால் நாடு பிரி­யாது என பல கதை­களை கூறி­னார்கள். ஆனால் இப்­போது நாட்டை பிரிக்க முயற்­சிக்­கின்­றனர். அதேபோல் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் புலி­களை நியா­யப்­ப­டுத்தி அவர்­களை மீண்டும் உரு­வாக்கும் கருத்­து­களை குறிப்­பி­டு­கின்றார். ஆகவே இந்த செயற்­பா­டுகள் நாட்டை பாதிக்கும் வகையில் அமைந்­துள்­ளது.

எனவே நாட்­டையும் மக்­க­ளையும் பாது­காக்கும் வகையில் இவர்­களை உட­ன­டி­யாக கைது­செய்து விசா­ரிக்க வேண்டும். எமது முறைப்பாட்டை கவனத்தில் கொள்ளாது இருந்தாலோ அல்லது புறக்கணித்து செயற்பட்டாலோ நாம் அடுத்த கட்டமாக நீதிமன்றம் வரையில் செல்வோம். அதேபோல் சிங்கள பெளத்த அமைப்புகளை இணைத்துக்கொண்டு இவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்..

கூட்டமைப்புசம்மந்தன்சிங்கள ராவய கட்சிதலைமையகம்நீதிமன்றம்பொதுபலசெனாபோலீஸ்வடமாகாணம்விக்கினேஸ்வரன்
Comments (0)
Add Comment