விரைவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுமாம்! சீ.வீ.கே சிவஞானம்

விடுதலைப்புலிகள் தற்போது தம்மோடு இருப்பதாக தெரிவித்துள்ள வடமாகாண அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இலங்கையில் அவ்வமைப்பின் மீதான தடையினை நீக்க சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட பாடல்களிற்கு தமிழரசுக்கும் பொறுப்புக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணாமல் போனோர் விவகாரம் போன்றவற்றில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஜனாதிபதியுடன் பேசி தீர்க்கவும் வடமாகாண அவை தலைவரும் தமிழரசு பிரமுகருமான சீ.வீ.கே.சிவஞானம் கருத்து தெரிவித்துள்ளார்.

கட்சிதடைதமிழரசுதேர்தல்விடுதலைப்புலிகள்
Comments (0)
Add Comment