வவுனியாவில் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற ஒருவர் தனது மாமன் மாமியையும் வெட்டிக் காயப்படுத்தி விட்டு, தற்கொலை செய்து கொண்டார். நேற்றிரவு 11.30 மணியளவில் வவுனியா மகாறம்பைக்குளத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ரா.அமுதா (வயது-38) என்பவர் வெட்டிப் படுகொலை செய்ப்பட்டுள்ளார். இவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வே.ராமச்சந்திரன் (வயது-65), இவரது மனைவியான ரா.கிருஸ்ணவேணி (வயது-55) ஆகிய இருவரும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தனது மனைவியை கோடரியால் வெட்டி படுகொலை செய்து, மாமன் மாமியை வெட்டிக் காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் செ.ராசேந்திரன் (வயது-45) என்பவர் தனது வீட்டுக்கு மூன்று கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காத்தார் சின்னக்குளம் பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சடலத்தை வவுனியா பொலிஸார் மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அத்துடன் மேலதிக விசாரணைகளையும் நடத்திவருகின்றனர்.