Designed by Iniyas LTD
ஜல்லிக்கட்டு குறித்து விரைவில் நல்ல முடிவு : பிரகாஷ் ஜவடேகர் உறுதி
டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை ஜல்லிக்கட்டு பேரமைப்பினர் சந்தித்தனர். பொங்கல் நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று அப்போது கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என ஜல்லிக்கட்டு பேரமைப்பினரிடம் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.