தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் – சிவி விக்கி

தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை யாழ் பொதுநூலகத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.modi-vikki

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு 13ம் திருத்தச் சட்டம் இறுதித் தீர்வுத் திட்டமாக அமையாது. 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் பரிந்துரை வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், நிரந்தரத் தீர்வுத் திட்டத்தை எட்ட இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்ளாது 13ம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

Comments
Loading...