Designed by Iniyas LTD
மாநிலங்களவையை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் உடன்பாடு
நடப்புக் கூட்டத் தொடரின் எஞ்சியுள்ள நாட்கள்வரை மாநிலங்களவையை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளதால், எஞ்சியுள்ள 3 நாட்கள் அவையை சுமூகமாக நடத்த உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து எஸ்.சி. , எஸ்.டி. பிரிவினருக்கு எதிராக குற்றங்களின் ஈடுபடுவோரின் தண்டனையை கடுமையாக்குதல் உள்ளிட்ட 6 மசோதாக்களை வரும் நாட்களில் நிறைவேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றுவதில் உடன்பாடு எட்டப்படவில்லை.