Designed by Iniyas LTD
அமைதிக்கான நோபல் பரிசை வென்றது துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தை குழு
அமைதிக்கான நோபல் பரிசு துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தை குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. துனிசியாவில் புரட்சிக்கு பிறகு ஜனநாயகத்தை ஏற்படுத்த பாடுபட்டதற்காக இக்குழுவிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தை குழு 4 அமைப்புகளை உள்ளடக்கியது.
அரபு எழுச்சி தொடங்கிய துனிசியாவில் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட தேசிய பேச்சுவார்த்தை குழு முக்கிய காரணமாக இருந்தது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயில் உள்ள ஆஸ்லோ நகரில் அறிவிக்கப்பட்டது.