தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் சட்டத்திட்டங்களின் ஊடாக ஈழ மக்களுக்கு சம உரிமையை வழங்க வேண்டும் – இந்தியா

ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. அதன் மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் வேங்கய்யா நாயுடு இதனைத் தெரிவித்துள்ளார்.VBK-VENKAIAH_NAIDU

சிறிலங்கா அரசாங்கம் அரசியல் சட்டத்திட்டங்களின் ஊடாக ஈழ மக்களுக்கு சம உரிமையை வழங்க வேண்டும். இதனையே இந்தியா வலியுறுத்தி வருகிறது. அதேநேரம் சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் கொள்கையானது, சீனா போன்ற அண்டைய நாடுகளை வெறுப்பேற்றும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...