Designed by Iniyas LTD
ஆட்கடத்தலில் ஈடுபட்ட ஸ்ரீ படையினரை கைது செய்யத் தடை??
ஆட்கடத்தல், கப்பம் பெறுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள படையினரைக் கைது செய்ய வேண்டாம் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ, கடற்படை தளபதிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே, இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.