Designed by Iniyas LTD
இங்கிலாந்தில் மாவீரர் குடும்பத்தினருக்கு கௌரவிப்பு !
தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்த வீரர்களின் மரணம் என்பது மக்களின் மனதில் விடுதலை உணர்வை விதைக்கும் ஒரு சரித்திர நிகழ்வாகும். அவ்வாறு காலத்தினால் மறையாத மாவீரர்களின் குடும்பத்தினரை, உறவினர்களை கௌரவிக்கும் விதத்தில் பிரித்தானியா – தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் இங்கிலாந்திலுள்ள கவுன்றி, ஹாரோ மற்றும் டூட்டிங் நகரில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று(ஞாயிற்று கிழமை) மாலை நடைப்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு மாவிரர்களின் குடும்பத்தினரை கௌரவித்தனர்.


