Designed by Iniyas LTD
இத்தாலியில் நிலநடுக்கம்! ஆறுபேர் பலி
இத்தாலியின் தென் பகுதியிலுள்ள நகரமான பெருச்யியாவில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை ஏற்பட்ட 6.4 ரிச்டர் அளவிலான நில நடுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் இடுபாடுகளுக்கிடையில் காணாமல் போயுள்ளதாகவும் இவர்களும் உயிரிழந்திருக்கக் கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இத்தாலியின் தலைநகரத்திலுள்ள கட்டடங்கள் 20 செக்கனுக்கு குலுங்கியதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.