Designed by Iniyas LTD
இரணைமடு மற்றும் முத்தையகட்டு குளங்களின் வான் கதவுகள் திறக்கப்படுவதற்கான ஆயத்தங்கள்- அவதானமாக இருக்குமாறு மக்களிற்கு அறிவுறுத்தல் ..
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் #37அடி 3அங்குலத்தை தற்பொழுது எட்டியுள்ளது.
குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்துள்ளமையால் கலிங்கு ஊடாக வான் 1 அடிவரை பாய ஆரம்பித்துள்ள நிலையில் 11 வான் கதவுகள் திறக்கப்படுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொண்டுவருகிறார்கள் .
எனவே பன்னங்கண்டி,முரசுமோட்டை, ஐயன்கோவிலடி, பளையவட்டக்கச்சி,பெரியகுளம், வெளிக்கண்டல், கண்டாவளை, ஊரியான், போன்ற பகுதி மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுகுளத்தின் நீர் வரத்து அதிகரித்து கானப்படுவதால் கலிங்கு ஊடாக வான் 6 அங்குலம் பாய ஆரம்பித்துள்ள நிலையில் இன்று திறக்க இருப்பதனாலும் கீழ்குறித்த பிரதேசங்களில் பேராற்றங்கரையை அண்டிய மக்கள் மிகஅவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1. முத்துவிநாயகபுரம்
2. கனேசபுரம்
3. பேராறு
4. பண்டார வன்னி கிராமம்
5. கெருடமடு
6. மன்னகண்டல்









