Designed by Iniyas LTD
இலங்கை அகதிகளுக்கு இந்திய பிரஜாவுரிமைகளை வழங்க தாமதிக்கக்கூடாது – இவிகேஎஸ். இளங்கோவன்
இலங்கை அகதிகள் மீண்டும் திரும்பி செல்ல விரும்பினால் மாத்திரமே அவர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மீண்டும் அவர்கள் திரும்பி வர விரும்பினால் வருவதற்கு ஏற்ப இந்திய பிரஜாவுரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அகதிகள் பல வருடங்களாக இந்தியாவில் தங்கியிருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு இந்திய பிரஜாவுரிமைகளை வழங்க தாமதிக்கக்கூடாது என்றும் இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்