தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை கடற்படையின் அழைப்பினை நிராகரித்த நாடுகள்…

கொழும்பில் இலங்கை  கடற்படை நடத்தும், காலி கலந்துரையாடலில் இம்முறை அதிகளவு நாடுகள் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய, ‘காலி கலந்துரையாடல்-2018’ கடல்சார் பாதுகாப்பு மாநாடு இன்றும்  இரண்டாவது நாளாக தொடரவுள்ளது.

இந்த மாநாட்டில், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் கடற்படை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

குறித்த மாநாட்டில் பங்கேற்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தினால், 73 நாடுகளுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில்  38 நாடுகள் மாத்திரமே தமது பிரதிநிதிகளை  இந்த மாநாட்டில்  பங்கேற்க அனுப்பியுள்ள நிலையில் . 35 நாடுகள் கடற்படையின்  அழைப்பை ஏற்கவில்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது..

இதேவேளை இலங்கை கடற்படையின்  அழைப்பை நிராகரித்த நாடுகளில், தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, நோர்வே, பெல்ஜியம், டென்மார்க், ஈரான், தென்கொரியா, மொறிசியஸ் போன்ற நாடுகளும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...