தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலவசக்கல்வியில் எவரும் கைவக்க அனுமதிக்கப்போவதில்லை- எதிர்கட்சி தலைவர்

இலங்கையின் இலவசகல்வியில் எவரும் தலையிடுவதற்கு அனுமதிக்கபோவதில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
படையினரோ அல்லது வேறு எந்த குழுவினரோ இலவசக்கல்வியில் தலையிடுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் நாங்கள் சுதந்திரக்கல்வியை முழு மனதுடன் பாதுகாக்கிறோம்,எந்த பலம் வாய்ந்த சக்தியும் தனி அல்லது அமைப்பு இலவசக்கல்வியில் தலையிட அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கொத்தலாவல பல்கலைகழக விவகாரத்தில் பாதுகாப்பு படையினர் தங்கள் திட்டத்தை முன்னெடுக்க அனுமதிக்கவேண்டும் ஆனால் இலவசகல்விக்கு பாதிப்பை ஏற்படுத்த நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்
அரசாங்கம் விரும்பும் விதத்தில் இலவசகல்வியுடன் இணைப்பதற்கு நாங்க்ள அனுமதிக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே நாங ;கள் தெளிவான செய்தியை நாட்டிற்கு தெரிவிக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஐக்கியதேசிய கட்சி என்பது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் நவதாரளவாதி இடதுசாரி வலதுசாரி போன்ற முத்திரைகளிற்குள் சிக்குப்படப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Loading...