தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

”ஈழத்துக்காவியம்” நான் இறப்பதுக்குள் எழுதுவேன்!

famer_day_001ஈழத்­த­மி­ழர்­களின் துய­ரத்­தையும், வீரத்­தை யும் மகா காவி­ய­மாக எழு­துவேன். அதனை உல­கெங்கும் எடுத்துச் செல்வேன். அதுவே என் வாழ்நாள் திட் டம் என்­பதை இந்த மண்ணில் இருந்து தெரி­விக்க விரும்­பு­கிறேன் என கவிப்­பே­ர­ரசு வைர­முத்து முல்­லைத்­தீவில் தெரி­வித்­துள்ளார்.

முல்­லைத்­தீவு முள்­ளி­ய­வளை வித்­தி­யா­னந்தா கல்­லூ­ரியில் நேற்று முன்­தினம் வடக்கு மாகாண விவ­சாய அமைச்சின் ஏற்­பாட்டில் இடம்­பெற்ற உழவர் பெரு­விழா நிகழ்வில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார் தொடர்ந்து அங்கு அவர் உரை­யாற்­று­கையில்

இந்த நிகழ்வு ஆரம்­பிக்­கின்ற போது இந்த விழாவை தொகுத்து வழங்­கிய நண்பர் அடிக்­கடி வானத்தை பார்த்தார் வானம் முணு­மு­ணுக்­கி­றதை பார்க்­கிற போதெல்லாம் அவ­ருக்கு ஒரு அச்சம் மேலிட்­டது இங்கே வானத்தின் முடிச்­சுகள் அவிழ்ந்து விடுமோ!, இந்த மண் நனைந்து விடுமோ!, அந்த வலியில் எங்கள் தமி­ழர்கள் கரைந்­து­வி­டு­வார்­களோ!, அல்­லது கூட்டம் கலைந்­து­வி­டுமோ!? என்ற அச்­சத்தின் கார­ண­மாக அல்­லது ஆர்­வத்தின் கார­ண­மாக மழையே வழி­விடு வர்­ண­ப­க­வானே அருள்­புரி என்­றெல்லாம் வானத்­திற்கு கோரிக்கை விடுத்தார்

நான் நினைத்­துக்­கொண்டேன் வெடி மழை­யி­லேயே கரைந்து போகாத எங்கள் தமி­ழர்க்ள இந்த இடி மழை­யிலா கரைந்து போகப்­போ­கி­றார்கள்?

இந்த மண்ணின் மக்­களே! தமிழ் பெரு மக்­களே! என் இரத்த உற­வு­களே! உங்­க­ளை­யெல்லாம் பார்க்­கின்­ற­போது என் தோள்கள் விரிந்து நிற்­கின்றேன்,என் மார்பு அக­ழ­மா­கி­றது உங்கள் கண்­ணீரில்,உங்கள் இரத்­தத்தில் உங்கள் வியர்­வையில் உங்கள் துய­ரத்தில் அழு­து­கொண்­டி­ருந்த ஒரு ஆண்மா இன்று உங்கள் முன்னால் வந்து பேசிக்­கொண்­டி­ருக்­கி­றது உங்­களை நலம் விசா­ரிக்க வந்தேன் உங்கள் கைகளை தொட்டுப் பார்க்க வந்தேன் உங்கள் கண்­களில் நம்­பிகை வெளிச்சம் இருக்­கி­றதா என்று பார்க்க வந்தேன் உங்­க­ளுக்கு ஆறுதல் சொல்ல வந்தேன் உங்­கள அன்பை பகிர்ந்­து­கொள்ள வந்தேன் வாழ்க்கை இன்னும் மிச்­ச­மி­ருக்­கி­றது என்ற நம்­பிக்­கையை உங்­க­ளுக்கு விதைக்க வந்தேன்

நான் இப்­போ­துதான் முதன்­மு­த­லாக இந்த மண்­ணுக்கு வந்­தி­ருக்­கிறேன் இந்த மண்ணை தொட்டு வணங்­கு­கிற போது எனக்கு என்ன உணர்வு வந்­தது என்­பதை ஆயிரம் சொற்­களால் எழு­தி­காட்ட முடி­யாது. முதன் முதல் மண்ணில் விழு­கி­ற­போது மழைத்­து­ளிக்கு ஒரு சிலிர்ப்பு வருமே மண்­ணுக்கு ஒரு உயிர்ப்பு வருமே அந்தச் சிலிர்ப்பு அந்த உயிர்ப்பு. முதல் முத்தம் பெறு­கிற போது உயி­ருக்குள் ஒரு பூ பூக்­குமே அப்­படி ஒரு சிலிர்ப்பு முதல் இரத்தம் குழந்­தை­ககு வலி­கிற போது தாயின் இதயம் துடிக்­குமே அந்த துடிப்பு இவை­க­ளை­யெல்லாம் இந்த மண்ணை தொட்டுப் பார்­கின்ற போது என் உடம்பு உணர்ந்­தது. என் உள்ளம் உணர்ந்­தது என் முளை உணர்ந்­தது என் தமிழ் உணர்ந்­தது காரணம் உங்கள் பாதி நாங்கள் எங்கள் பாதி நீங்கள்.

வார்த்­தைகள் எல்லாம் வெறும் வார்த்­தைகள் அல்ல ஊர் பெயர்கள் எல்லாம் வெறும் ஊர் பெயர்கள் அல்ல வவு­னியா, கிளி­நொச்சி யாழ்ப்­பாணம் முல்­லைத்­தீவு முள்­ளி­வாய்க்கால் வல்­வெட்­டித்­துறை என்ற பெயர்­களை; உச்­ச­ரிக்­கின்ற போது இவை ஊர் பெயர்கள் அல்ல சரித்­தி­ரத்தின் தெருக் குறிப்­புகள் என்ற உண்­மையை இந்த  உல­கம உணர்ந்­தி­ருக்­கி­றது.

உலக இனத்­திற்­கெல்லாம் தமி­ழர்­களின் முக­வ­ரியை எழுதிக் காட்­டிய இலங்கைத் தழி­ழர்­களின் மண்ணில் நிற்­கிறேன். சான்­றோரும் தமிழ் படித்து சாக­வேண்டும் என் சாம்­பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் என்று எழு­திய இலங்கைப் புலவர் சச்­சி­தா­னந்­தனின் மண்ணில் நிற்­கிறேன்.

முதல் மரி­யாதை திரைப்­ப­டத்தில் ஒரு பாடல் வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம் என்ற வரி இந்த வரிக்குப் பெருமை தந்­தவர் வைர­முத்து,விருது பெற்­றவர் வைர­முத்து கைத்­தட்டல் பெற்­றவர் வைர­முத்து ஆனால் அந்த விருது, அந்த பெருமை, அந்த கைதட்டல், அந்த இலக்­கிய மேன்மை, எல்லாம் யாரைச் சென்று சேர வேண்­டுமா தோழர்­களே இலங்கை தோட்டத் தொழி­லா­ளி­களை சேர வேண்­டிய வரிகள் வெட்­டி­வேரு வாசம் வெடல புள்ள நேசம் இந்த வரியை ஈழத்தின் மலை­யக தோட்டத் தொழி­லா­ளி­களின் பாட்டுத் தொகுப்­பில்தான் நான் முதன் முதலில் பார்க்­கிறேன். எனவே அந்த வெற்­றியை அந்தப் பெரு­மையை அந்த மண்­ணுக்கும் அந்த தொழி­லா­ளி­க­ளுக்கும் நான் காணிக்கைச் செலுத்த வந்­தி­ருக்­கிறேன்.

ஈழத்து மண்ணின் பெரும் கதையை ஒரு மகா காவி­ய­மாக ஆக்­கு­துதான் வைர­முத்­துவின் வாழ்நாள் திட்டம் என்பதை நான் இந்த மண்ணில் இருந்து தெரிவிக்க விருபுகிறேன். எழுதுவேன் என் விரல்கள் எனக்கு சம்மதிக்கும் காலம் வரை, எழுதுவேன் தமிழ் எனக்கு துணை இருக்கும் காலம் வரை. எழுதுவேன் என் நெஞ்சில் ஈரம் இருக்கும் காலம் வரை. தமிழர்களின் கண்ணீர் மாற்றப்படும் காலம் வரை. எனத் தெரிவித்தார்.

Comments
Loading...