தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐ.நா பிரேரணையை ஆராய விசேட செயலணி?

showImageInStoryஇலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்­பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை தொடர்­பாக ஆராய்­வ­தற்கும் அது தொடர்­பான அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகளை ஆரம்­பிப்­ப­தற்கும் உள்­ளக விசா­ரணைப் பொறி­முறை குறித்த கட்­ட­மைப்பை நிறு­வுவ­தற்கு ஆலோ­சனை வழங்­கவும் 11 பேர் கொண்ட விசேட செய­ல­ணியை அர­சாங்கம் நிய­மித்­துள்­ளது.

விரைவில் இலங்கை வர­வுள்ள ஐக்­கிய நாடு­களின் உண்மை, நீதி, மீண்டும் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டா­ததை உறு­திப்­ப­டுத்­து­வது தொடர்­பான ஐக்­கிய நாடு­களின் விசேட ஆணை­யாளர் பப்லோ டி கிரீப்­புடன் இணைந்து இந்த விசேட செய­லணி செயற்­படும் என தெரி­ய­வ­ரு­கி­றது. விசேட செய­ல­ணியின் ஆலோ­சனை செயற்­பா­டா­னது பாதிக்­கப்­பட்­டோரை மையப்­ப­டுத்­தி­ய­தா­கவும், மூன்று மாதங்­களில் நிறை­வ­டை­யக்­கூ­டி­ய­தா­கவும் அமையும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விசேட செய­ல­ணியின் தலை­வ­ராக மனோரி முத்­தெட்­டு­வே­கம நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் செய­லா­ள­ராக கலா­நிதி பாக்­கிய ஜோதி சர­வ­ண­முத்து செயற்­ப­ட­வுள்ளார்.

இந்த விசேட செய­ல­ணியின் ஏனைய உறுப்­பி­னர்­க­ளாக காமினி விஜ­யங்­கொட, பேரா­சி­ரியர் சித்­தி­ர­லேகா மௌன­குரு, விசாகா தர்­ம­தாச, தர்­ம­சிறி பண்­டா­ர­நா­யக்க, டாக்டர் பர்­ஸானா ஹனிபா, சாந்த அபி­மா­ன­சிங்கம், விராக் ரஹீம், பேரா­சி­ரியர் தயா சோம­சுந்­தரம் மற்றும் கமீலா சம­ர­சிங்க ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஐக்­கிய நாடு­களின் உண்மை, நீதி, மீண்டும் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டா­ததை உறு­திப்­ப­டுத்­து­வது தொடர்­பான ஐக்­கிய நாடு­களின் விசேட ஆணை­யாளர் பப்லோ டி கிரீப் அடுத்­த­வாரம் இலங்கை வர­வுள்ள நிலையில் இந்த விசேட செய­ல­ணி­யா­னது அவ­ருடன் இணைந்து பணி­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

இந்த விசேட செய­ல­ணியின் வேலைத்­திட்­டங்கள் ஏற்­க­னவே வரை­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இரண்டு கட்­டங்­க­ளாக இந்­த­வி­சேட செய­லணி ஆலோ­ச­னை­க­ளையும் கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் நடத்­த­வுள்­ளது.

சிறு­வர்கள், படை­யினர், அங்­க­வீ­ன­மான போரா­ளிகள், வித­வைகள், முன்னாள் சிறுவர் போரா­ளிகள், உள்­ளிட்ட தரப்­பி­ன­ருடன் இந்த செய­ல­ணி­யா­னது விசேட கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் நடத்­த­வுள்­ளது.

ஏற்­க­னவே மேற்­கொள்­ளப்­பட்ட வரைபு திட்­டத்­திற்கு அமை­வாக ஆலோ­சனை செயற்­பா­டா­னது பாதிக்­கப்­பட்­டோரை மையப்­ப­டுத்­தி­ய­தா­கவும், மூன்று மாதங்­களில் நிறை­வ­டை­யக்­கூ­டி­ய­தா­கவும், இருக்­கு­மென தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. நல்­லி­ணக்கம் தொடர்­பாக பிர­தமர் அலு­வ­ல­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள விசேட குழு­விற்கு இந்த செய­லணி தமது பரிந்­து­ரை­களை முன்­வைக்­க­வுள்­ளது.

இந்த ஆலோ­ச­னை­களும் கலந்­து­ரை­யா­டல்­களும் நிறை­வ­டைந்த பின்­னரே உள்­ள­க­வி­சா­ரணை குறித்த இறுதி வடிவம் அமைச்­ச­ர­வைக்கும் பாரா­ளு­மன்­றத்­திற்கும் சமர்ப்­பிக்­கப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்த விசேட செய­ல­ணிக்கு ஒரு செய­ல­கத்தை அமைப்­ப­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­திற்கும் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்கியுள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் தற்போது பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுடனும் வடக்கு மாகாண சபையினருடனும் பேச்சு நடத்தியிருந்தார்.

Comments
Loading...