தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஏழு வல்லரசுகள் ஈழத் தமிழரை அழித்தன: ஐ.நாவில் வைகோ ஆதங்கம்!

புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஏழு அணு ஆயுத வல்லரசுகள் நடத்திய போது எதிர்த்து நின்ற வீர வரலாறு கொண்டவர் தலைவர் பிரபாகரன் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார். அத்துடன், பிரபாகரன் இவையனைத்தையும் எதிர்த்து நின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள அவரிடம் தற்போதைய கள நிலவரம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Comments
Loading...