Designed by Iniyas LTD
ஐதராபாத்தில் வெடி விபத்து! நான்கு பேர் பலி
ஐதராபாத் புறநகர் பகுதியான மங்கல் என்ற இடத்தில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழ்ந்தனர்.
அங்குள்ள ஒரு கொதிகலன் அழுத்தம் தாங்காமல் வெடித்து சிதறியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில் பலியான நான்கு பேரும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ள நிலையில் காயமடைந்த மேலும் ஒருவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ள போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.