தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்த அழுத்தம் கொடுப்போம்!

Mavai-senathirajah-speech-2-720x480ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­த­வேண்­டு­மென அர­சாங்­கத்­திற்கு அழுத்­த­ம­ளிக்­கு­மாறு இலங்­கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ரி­டம் நேரில் வலி­யு­றுத்­து­வோ­மென தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ர் மாவை.சோ.சேனா­தி­ராஜா தெரி­வித்­துள்ளார்.

உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் எதிர்­வரும் வெள்ளிக்­கி­ழமை இலங்­கைக்கு விஜயம்

செய்­வுள்ளமை தொடர்பில் வினவியபோதே மாவை எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

இவ்­வி­ஜ­யத்­தின்­போது எதிர்­வரும் 9ஆம் திக­தி­வ­ரையில் இலங்­கையில் தங்­கி­யி­ருக்­கு­ம் ஹூசைன் வடக்­கிற்கு விஜயம் செய்­ய­வுள்ளார். இதன்­போது வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வரன் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­க­ளையும் சந்­திக்­க­வுள்­ள­தோடு யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளையும் பார்­வை­யி­ட­வுள்ளார்.

அத­னைத்­தொ­டர்ந்து எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் உள்­ளிட்ட கூட்­ட­மைப்பு குழு­வி­ன­ரையும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் பல­ரையும் சந்­திக்­க­வுள்ளார்.

இந்­நி­லையில் ஐ.நா மனித உரி­மை­க­ளு­ட­னான ஆணை­யா­ள­ருடன் நேர­டி­யான சந்­திப்பு தொடர்­பாக தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா மேலும் தெரி­விக்­கையில்,

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் குறித்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30ஆவது கூட்­டத்­தொ­டரில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. இத்­தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்­கான இணை அனு­ச­ர­ணை­யையும் இலங்கை அர­சாங்கம் வழங்­கி­யி­ருந்­த­தோடு அதனை ஏற்­றுக்­கொண்டு நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தா­கவும் உறு­தி­மொ­ழி­களை பகி­ரங்­க­மா­கவே வழங்­கி­யி­ருந்­தது.

அவ்­வா­றான நிலையில் தற்­போது அத்­தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்­கு­ரிய இறுதிப் பொறி­மு­றை­யா­னது தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. அதே­நேரம் தீர்­மா­னத்தில் குறிப்­பிட்­டி­ருப்­ப­தைப்­போன்று விசா­ர­ணை­யின்­போது பொது­ந­ல­வாய மற்றும் வெ ளிநாட்டு நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள், வழக்­கு­ரை­னர்கள், விசா­ர­ணை­யா­ளர்கள் பங்­கேற்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

எனினும் தற்­போது அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் முன்­னுக்­குப்­பின்­ முரண்­பா­டான கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். அதே­நேரம் விசா­ரணைப் பொறி­மு­றையை அமைப்­ப­தற்­கான ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் முழு­மை­யாக திருப்­தி­ய­ளிப்­ப­தா­க­வில்லை.

இந்­நி­லை­யி­லேயே ஐ.நா.தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வது குறித்து அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள விட­யங்கள் தொடர்பில் நேர­டி­யாக ஆராய்­வ­தற்­காக ஐ.நா மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யாளர் வருகை தரு­கின்றார்.

அவரை நேரில் சந்­திக்­க­வுள்ள நாம் ஐக்கிய நாடுள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என்பதை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி கோரவுள்ளோம். அது மட்டுமன்றி எமது மக்கள் எதிர்நோக்கும் குறுகிய மற்றும் நீண்டகாலப்பிரச்சினைகள் தொடர்பாகவும் எடுத்துக்கூறவுள்ளோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இவ்விடயங்களை கவனத்தில் கொண்டு தனது நடவடிக்கைளை முன்னெடுப்பார் என்ற அபரீதமான நம்பிக்கையுள்ளது என்றார்.

Comments
Loading...