தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒட்டுமொத்த கேபினெட்டையும் குழுவாக களமிறக்கியுள்ளார் ஜெயலலிதா

திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் தேர்தல் பணிக்கு 50 பேர் கொண்ட ஒட்டுமொத்த கேபினெட்டையும் குழுவாக ஜெயலலிதா களமிறக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.jayalalitha

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக தற்போது நியமித்துள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக 50 பேர் நியமிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதன், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், ப.மோகன், பா.வளர்மதி, செல்லூர் ராஜு, காமராஜ், தங்கமணி, செந்தில் பாலாஜி, சம்பத், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி, சின்னையா, கோகுல இந்திரா, சுந்தரராஜ், சண்முகநாதன், சுப்பிரமணியன், ஜெயபால், முக்கூர் சுப்பிரமணியன், உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, ரமணா, வீரமணி, ஆனந்தன், தோப்பு வெங்கடாசலம், பூனாட்சி, அப்துல் ரஹீம், விஜயபாஸ்கர், மேலும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலர் தமிழ்மகன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டசபை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பெயர்களும் இந்த பட்டியலில் உள்ளன.

மேலும் நாடாளுமன்ற, சட்டமன்ற துணை சபாநாயகர்களும் இதற்காக களமிறக்கப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த அமைச்சரவையே ஸ்ரீரங்கம் சட்டசபை இடைத் தேர்தலில் களப்பணியாற்றப் போகிறது என்பது தெளிவாகிறது.

Comments
Loading...