தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒரு நாள் பரோலில் செல்ல நளினிக்கு நீதிமன்று அனுமதி!

5415.hmg-nalini-300x200ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, தனது தந்தையில் நினைவு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 24 மணிநேர பரோலில் செல்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

3 நாட்களுக்கு அவர், பரோல் கோரியிருந்த போதும் அவருக்கு 24 மணிநேர பரோலே வழங்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 4 மணியிலிருந்து, நாளை பிற்பகல்  4 மணிவரையுமே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவரது தந்தை உயிரிழந்த தினத்தன்று, 15 மணிநேர பரோலில் செல்ல நளினி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது தந்தை உயிரிழந்து, நாளையுடன் 16 நாட்களாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...