தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒரு வருடத்துக்குள் 470 அகதிகள் தாயகம் திரும்பினர்!

refugis_CI2015ஆம் ஆண்டிலிருந்து, இவ்வாண்டு ஜனவரி 26ஆம் திகதி வரையிலும் தமிழ் அகதிகள் 470 பேர்,  தமிழ்நாட்டிலிருந்து தாயகம்  திரும்பியுள்ளனர் என்று இலங்கை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியாவிலுள்ள 109 முகாம்களில்; 64,000 பேர் இன்னும் இருக்கின்றனர் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து இறுதியாக, கடந்த 26ஆம் திகதியன்று 20 அகதிகள் தாயகம்  திரும்பியுள்ளனர்.  அந்த 20 பேரில், 12 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் குடியமர்த்தப்படுவர் என்று, அவ்வமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

Comments
Loading...