Designed by Iniyas LTD
கண்டாவளை அருள்மிகு மல்லிகை அம்மன் ஆலய கிணற்றில் இருந்த நீர் வெளியேறி வருகின்றது
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பகுதியில்அமைந்துள்ள அருள்மிகு மல்லிகை அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கிணற்றிலேயே இப் பெரும் அதிசயம் இடம் பெற்று வருகின்றது. நிலத்தின் மேல் சுமார் இரண்டரை அடிக்கு உயரமாக அமைந்த கட்டுப்பகுதிக்கும் மேலாக கிணற்றில் இருந்த நீர் வெளியேறி வந்தது .
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களால் குழாய்களை வைத்து எயார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது. நீர் குறைவடைந்து சென்றபோதும் மீண்டும் நீர் மேல் நோக்கியே வந்த வண்ணம் உள்ளது. இதனை பார்வையிட மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.