Designed by Iniyas LTD
காஷ்மீரில் செல்போன் சேவை ரத்து!10 நாட்களாக ஊரடங்கு உத்தரவு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி புர்ஜான் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து ஏற்பட்ட வன்முறையில் 40-ம் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஏராளமான துணை ராணுவப்படையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் தொடர்ந்து 10-வது நாளாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்போன் மற்றும் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் மட்டும் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மட்டும் வேலை செய்கிறது. அமைதியை தொடர்ந்து நிலைநாட்டும் வகையில், அடுத்த சில நாட்களுக்கு செய்தித்தாள்கள் அச்சிடவோ, வெளியிடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, பள்ளிகளுக்கான கோடை விடுமுறை வரும் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீடிக்கும் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.